32 சவரன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள்...14 சவரன் நகையை விட்டு சென்றது ஏன்?

32 சவரன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள்...14 சவரன் நகையை விட்டு சென்றது ஏன்?

செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 32 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பூட்டை உடைத்து நகைக்கொள்ளை:

செங்கல்பட்டு மேலமையூர் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் பூபதி. இவர் மதுராந்தகம் அடுத்த பொய்கைநல்லூரில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். நேற்றிரவு வழக்கம்போல் தனது வீட்டில் பூபதி தனது குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தை பயன்படுத்தி பக்கத்து அறையின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

பூபதிக்கு காத்திருந்த அதிர்ச்சி:

இந்நிலையில், மறுநாள் காலையில் பூபதி எழுந்து பார்க்கும் போது பக்கத்து அறை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை அலசிய பூபதிக்கு பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: ஆ.ராசா வழக்கு: ஏழு வருடத்திற்கு பிறகு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை...!

தடயங்களை சேகரித்த போலீசார்:

உடனே பூபதி போலீசார்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் குற்றவாளியின் தடயங்களை சேகரித்து வருகின்றனர். நகையை பறிகொடுத்த ஆசிரியர் பூபதி கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

14 சவரன் நகையை விட்டு சென்ற கொள்ளையர்கள்:

மேலும், ஆசிரியர் பூபதி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது பக்கத்து அறையின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த திருட்டு சம்பவத்தில் 14 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் பீரோவில் விட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.