எம் எல் ஏ நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு; குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை!

எம் எல் ஏ நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு; குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை!

கடலூர் எம்எல்ஏ கலந்து கொண்ட  நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு  வீசிய குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர் அருகேயுள்ள நல்லாத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகியின் இல்ல மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கடலூர் தொகுதி எம் எல் ஏ ஐயப்பன், மண்டபத்திற்குள் நுழையும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், திருமண மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றார்.

இந்த சம்பவத்தில் எல் எல் ஏ உட்பட பொதுமக்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் ஏற்படவில்லை. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பெட்ரோல் குண்டு வீசியவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எம் எல் ஏ வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:டெல்லியில் வரலாறு காணாத அதிகனமழை; வெள்ளக்காடாக மாறிய முக்கிய சாலைகள்!