8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர்...
வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 8 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த புகாரில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகப்பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் குமார் 65. கட்டிட கூலி தொழிலாளியான இவர் தனது மகள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 3 வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுமி வீதியில் விளையாடி கொண்டிருந்த போது சிறுமியை தான் தங்கியிருந்த அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற அச்சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அச்சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் 8 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தான புகாரின் பேரில் கட்டிட தொழிலாளி குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.