சாதி மாறி திருமணம்...! மகனை வெட்டிக் கொன்ற தந்தை...!! 

சாதி மாறி திருமணம்...! மகனை வெட்டிக் கொன்ற தந்தை...!! 

ஊத்தங்கரையில் வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த மகனை தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் பார்ப்பப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணகிரி கிராமத்தில் வசித்து வருபவர் தண்டபாணி வயது 45 இவரின் மகன் சுபாஷ் வயது 25. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பூரில் அனுஷ்கா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். 

இந்நிலையில் அனுஷ்கா பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பது தண்டபாணிக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அவர் அந்த தீர்மானத்தை எதிர்த்து வந்துள்ளார். இது குறித்து இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுபாஷ் தனது பாட்டி ஊரான அருணபதியில் தங்கி உள்ளார்.

இதனை அறிந்து இன்று அதிகாலை அங்கு வந்த அவரது தந்தை தண்டபாணி  தூங்கிக் கொண்டிருந்த சுபாஷ் மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா மற்றும் அவரின் பாட்டி கண்ணம்மாள் ஆகிய மூவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த பாட்டி  கண்ணம்மாவும் பேரன் சுபாஷும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வெட்டுப்பட்ட அனுஷ்கா அருகே உள்ள முட்புதரில் ஒளிந்து தப்பித்துள்ளார். அவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததன் பேரில் அவரை ஊத்தங்கரை மருத்துவமனையில் வைத்துள்ளனர். சாதி மாறி திருமணம் செய்ததற்காக தந்தையே தன் மகனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காவேரிப்பட்டினம் அருகே நடுரோட்டில் மாமனாரே மருமகனை கொன்ற சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ஊத்தங்கரை அடுத்த அருணபதி  பகுதியில் இந்தத் ஆணவக்  கொடூர கொலை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் ஆணவக் கொலைகள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது