உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி...! நகையை  திருடிய டிப் டாப் ஆசாமி...!! 

உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி...! நகையை  திருடிய டிப் டாப் ஆசாமி...!! 

முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி இரண்டே கால் சவரன் நகையை டிப் டாப் ஆசாமி ஒருவர் திருடியுள்ளார்.   

கடலூர் மாவட்டம் மங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பொட்டியம்மாள். இவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் வயதான பொட்டியம்மாளிடம் முதியோர் உதவித்தொகை திட்டத்தில் பணம் வருகிறதா? என கேட்டுள்ளார். அதற்கு பொட்டியம்மாள் முதியோர் உதவித்தொகை வருவதில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து டிப் டாப் ஆசாமி முதியோர் உதவித்தொகையை  வாங்கித் தருவதாக கூறி அதற்கு போட்டோ எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மூதாட்டியும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அப்பொழுது பொட்டியம்மாள்  தனது கழுத்தில் இரண்டே கால் சவரன் நகை அணிந்து இருந்துள்ளார். அதற்கு போட்டோவில் நகை தெரிந்தால் உதவித்தொகை கிடைக்காது என கூறிய டிப்டாப் ஆசாமி நகையை கழட்டி வைக்கும் படி கூறியுள்ளார். இதனை நம்பி பொட்டியம்மாள் தனது நகையை கழட்டி தரையில்  வைத்துள்ளார். தரையி்ல் வைத்த இரண்டே கால் சவரன்  நகையை உடனடியாக எடுத்துக்கொண்ட டிப்டாப் ஆசாமி  அங்கிருந்து மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொட்டியம்மாள் கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதற்குள் டிப்டாப் ஆசாமி அவ்விடத்தை விட்டு சென்று விட்டதால் சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்

இதையும் படிக்க:"கேரளா ஸ்டோரி" தடை செய்ய சீமான் வலியுறுத்தல்...!!