கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து...
கரூர் அருகே கார் மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை | கிருஷ்ணராயபுரம் ஒரு பகுதியை சேர்ந்த ஜெபமாலை ராஜ் என்பவர் தனது காரில், மதுரை கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். கார் மேட்டுப்பட்டி பிரிவு ரோடு அருகே வரும்போது, அதன் எதிர் திசையில் தவறுதலான பாதையில் இரு சக்கரவாகனத்தில் வந்த முரளி மற்றும் அவரது மனைவி மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதனால், அவருக்கு பின்னாலே இருசக்கர வாகனத்தில் வந்த ராஜு, அவரது மனைவி தனக்கொடி ஆகியோர் மீது கார் மோதி இடது பக்க பள்ளத்தில், கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜு மற்றும் அவரது மனைவி தனக்கொடி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்து விட்டனர்.
மேலும் படிக்க | பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு...
முரளியின் மனைவிக்கு மட்டும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. இறந்தவர்களின் பிரேதம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காரின் உரிமையாளர் ஜெபமாலை ராஜ்க்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து சம்பந்தமாக அரவக்குறிச்சி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | தனியார் பள்ளி வேன் டயர் வெடித்து வயலில் கவிழ்ந்து விபத்து