ஒருதலைகாதலால் நேர்ந்த விபரீதம்...அக்கா-தங்கை மீது ஆசிட் வீச்சு...!!

உத்திரபிரதேசத்தில் ஒருதலைகாதலால் இளைஞன் ஒருவன் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைகாதலால் நேர்ந்த விபரீதம்...அக்கா-தங்கை மீது ஆசிட் வீச்சு...!!

உத்திரபிரதேச மாநிலம் பஹ்பட் மாவட்டத்தில் உள்ள ரோஷகர் கிராமத்தை சேர்ந்த  தரன்மும் மற்றும் மண்டஷா  இருவரும் உடன்பிறந்த சகோதரிகள். அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சகோதரிகளான தரன்முமை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளான். ஆனால், அவரின் காதலுக்கு தரன்மும் சம்மதம் தெரிவிக்காததால், அந்த இளைஞன் தரன்முமை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளான். 

இந்நிலையில், பெண்ணின் தந்தை வேலைக்கு சென்றதால் சகோதரிகள் இருவரும் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தனர். தரன்மும் வீட்டில் தந்தை இல்லாததை அறிந்த அந்த இளைஞன், வீட்டிற்குள் புகுந்து தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை உறங்கிக்கொண்டிருந்த தரன்மும் மற்றும் அவரது சகோதரி மண்டஷா மீது வீசிவிட்டு தப்பியோடினான்.
 
ஆசிட் வீசியதில் பலத்தகாயமடைந்த சகோதரிகள் இருவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்  சகோதரிகள் இருவரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தரன்முமின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, சகோதரிகள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச்சென்ற இளைஞனை கைது செய்தனர். தொடர்ந்து அவனிடம்  விசாரணை நடத்திய போலீசார், ஒருதலைகாதலால் சகோதரிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், ஒருதலைகாதலால் சகோதரிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.