காதலிப்பதாக கூறி சிறுமி கடத்தல்... 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது...

தேனி மாவட்டம் போடி அருகே காதலிப்பதாக கூறி, சிறுமியை ஆட்டோவில் கடத்திய இருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. 

காதலிப்பதாக கூறி சிறுமி கடத்தல்... 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது...

கேரளா மாநிலம் மூணாறு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜூ (28). இவருக்கும் போடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும்  கண்டித்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த 16 வயது சிறுமி தனது தங்கையுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மூணாறு பகுதியை சேர்ந்த ராஜூ அவருடைய நண்பர் ராமன் ஆகியோர் சேர்ந்து சிறுமியை ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தங்கை அவரது பெற்றோர்களிடம் சம்பவத்தை கூறியுள்ளார். உடனே சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் போடி எல்லை பகுதியான சாலை காளியம்மன் கோவில் அருகே சிறுமியை கடத்திச் சென்ற ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.

பின்பு ஆட்டோவில் இருந்த சிறுமியை மீட்ட  காவல்துறையினர் அவரை கடத்திய ராமன் (எ) ராஜூ ஆகிய இருவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.