ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை...!!!

ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை...!!!

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏஆர்டி குழுமத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை நொளம்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஏஆர்டி நகைகடை, மால் , டிரஸ்ட் என பல நிறுவனங்களை தொடங்கி பொதுமக்களிடமிருந்து ஏராளமான முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக நொளம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி ஏராளமானவரிடமிருந்து முதலீடுகளை பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக ஏராளமானவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்த நிலையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிப்பு பிரிவு போலீசார் ஏஆர்டி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிறுவனங்களை நடத்தி வந்த ஆல்பின் ஞானதுரை ,ராபர்ட் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  நீட் விண்ணப்பம்... இன்றுடன் நிறைவு!!