வரதட்சணை கேட்டு கொதிக்கும் பாலை மனைவி மீது ஊற்றிய கணவர்…  

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

வரதட்சணை கேட்டு கொதிக்கும் பாலை மனைவி மீது ஊற்றிய கணவர்…   

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

வாடிப்பட்டி அடுத்த அய்யனகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்தாண்டு ஜெயபிரதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணம் ஆன சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட அருண்குமார், ஆத்திரத்தில் கொதிக்கும் பாலை எடுத்து ஜெயபிரதா மீது ஊற்றிவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால் அலறி துடித்த ஜெயபிரதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கணவர் அருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.