புகைப்படத்தில் இருப்பவர் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் - தமிழ்நாடு ரயில்வே காவல்துறை அறிவிப்பு!
ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர்களைத் தாக்கிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு ரயில்வே காவல்துறை, துப்பு கொடுப்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் ரயிலில் வடமாநில இளைஞர்களை ஆபாசமாகப் பேசி தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவியது. அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் ஏராளமான வடமாநில இளைஞர்களை தமிழ் பேசக் கூடிய நபர் ஒருவர் கடுமையாக வசைபாடுவது இடம்பெற்றிருந்தது.
இதையும் படிக்க : வடமாநில இளைஞர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கிய தமிழ் நபர்...வைரலாகும் வீடியோ!
தன்னுடன் பயணம் செய்த வடமாநிலத்தவர்களிடம், நாங்கள் இருக்கும்போது நீங்கள் எதற்கு இங்கு வருகிறீர்கள் எனக்கேட்டு ஆபாசமாகத் திட்டி அவர்களை தாக்கிய நபரின் வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்துறை, அவரின் புகைப்படத்தை வெளியிட்டு குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், குற்றவாளி குறித்த தகவல் வழங்குவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
படத்தில் உள்ளவர் குற்றவழக்கில் ரயில்வே காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார். தகவல் அளிப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்
— TN Govt Railway Police (@grpchennai) February 17, 2023
He is wanted in a criminal case. information leading to his apprehension will be suitably rewarded.
contact 1512, 9962500500#crime #GRP #RPF #TNPolice pic.twitter.com/tdaxMCpEdu