வெடிகுண்டுகள் வீசி ரவுடி வெட்டிக் கொலை.. முன்விரோதம் காரணமா என போலீசார் தீவிர விசாரணை!!

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரவுடி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டுகள் வீசி ரவுடி வெட்டிக் கொலை.. முன்விரோதம் காரணமா என போலீசார் தீவிர விசாரணை!!

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மர்ம கும்பல்:

இந்த நிலையில், நள்ளிரவு நண்பர் சக்தி (20) என்பவருடன் தனது வீட்டில் பன்னீர்செல்வம் மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு மர்ம கும்பல் வந்து பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்தனர்.

சரமாரி அரிவாள் வெட்டு:

அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வமும், சக்தியும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் மர்மகும்பல் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி பன்னீர்செல்வம், அவரது கூட்டாளி சக்தி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

போலீசார் வழக்குப்பதிவு:

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு , ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவுடி பன்னீர்செல்வம் உயிரிழந்தார். மேலும் அவரது கூட்டாளியான சக்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கொலை குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

போலிசார் விசாரணை:

கொலை செய்யப்பட்ட பன்னீர்செல்வம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.