தந்தை மகள் இணைந்து சென்ற இறுதி ஊர்வலம்... கண்ணீரில் மூழ்கிய சாலைகள்...

சென்னை ஆலந்தூர் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்தியா மற்றும் அவரது தந்தை மாணிக்கம் ஆகியோரின் உடல்கள், மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தந்தை மகள் இணைந்து சென்ற இறுதி ஊர்வலம்... கண்ணீரில் மூழ்கிய சாலைகள்...

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து கல்லூரிக்கு புறப்பட்ட சத்தியா எனும் மாணவியை, காதல் விவகாரத்தில், சதீஷ் எனும் இளைஞர் ரயில் முன் தள்ளி கொலை செய்தார். இதையடுத்து, சத்தியாவின் உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் துரைப்பாக்கம் அருகே சதீஷ் கைது செய்யப்பட்டார். இவர் மீது தி.நகர், மவுண்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும் படிக்க | எனக்கு கிடைக்காதவ ...யாருக்கும் கிடைக்க கூடாது...காதலனின் பரபரப்பு வாக்குமூலம்...!

இதனிடையே, மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் மிகுந்த வேதனையில் இருந்த சத்தியாவின் தந்தை மாணிக்கம், நேற்று இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், உடற்கூறு ஆய்வு முடிந்ததை அடுத்து, இன்று பிற்பகல் 3 மணி அளவில் கல்லூரி மாணவி சத்தியா மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு கொண்டு வரப்பட்ட இருவரின் உடல்களுக்கும், உறவினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க | முறிந்த 5 வருட காதல்.. ரயில் முன் காதலியை தள்ளிவிட்ட காதலன்.. போலீசார் அதிரடி கைது.. தந்தை மரணம்..!

இதனைத் தொடர்ந்து, பழவந்தாங்கல் கண்ணன் காலனியில் உள்ள மின் மயானத்துக்கு உடல்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்த இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்க | ‘ஹிஜாப்’ வழக்கும்... கடந்து வந்த பாதையும்...