பாலியல் தொல்லை: தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு எதிரான போக்சோ வழக்கில் 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை: தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு எதிரான போக்சோ வழக்கில் 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

19 வயதுடைய மாணவி தனது பயிற்சியாளரால் பயிற்சியின் போது தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் அளித்த நிலையில் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி நாகராஜன் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பின் தற்போது நீதிமன்றத்தில் பூக்கடை போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு பயிற்சி காலகட்டங்களில் அவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட பயிற்சி மாணவிகளின் சாட்சியங்கள் மொழியாக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகள் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளான 19 வயது பெண்ணின் ரகசிய வாக்குமூலத்தின் விவரங்களும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.