மதம் மாறச் சொன்னதாகக் கூறி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் திடீர் திருப்பம்!!

மதம் மாறச் சொன்னதாகக் கூறி  மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் திடீர் திருப்பம்!!

அரியலூர் மாணவி தற்கொலை விசாரணையை, சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த, அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மதம் மாறச் சொல்லி, மாணவியை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜகவினர் ஆரம்பம் முதலே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், விடுதி காப்பாளர் மாணவியை படிக்க விடாமல் அதிக வேலை வாங்கியதே தற்கொலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, தனது தற்கொலைக்கான காரணம் குறித்து விளக்கும் செல்போன் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து, மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.