ஆதாரங்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- போலீஸ் குறித்து புகார்...

இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக சிசிடிவி ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் காவல் நிலையத்தில் விசாரணை இல்லை என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- போலீஸ் குறித்து புகார்...

சென்னை சைதாப்பேட்டை சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் இவர் கார்ஸ் 24 என்ற நிறுவனத்தில் நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் இடத்தில் பணிபுரிந்து வருகிறார். 

மேலும் படிக்க | ''பாட்டில் மணி'' தவறி விழுந்து கால் முறிவு!!

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி தியாகராய நகரில் உள்ள அவருடைய நண்பர் வீட்டில் இரவு தங்கிவிட்டு காலையில் பார்க்கும்போது அவருடைய pulsar 220 இருசக்கர வாகனம் திருடுபோய் உள்ளது. இது தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருக்கிறார்.

ஆனால் இதுவரை புகாரை பெற்றுக் கொண்டு எந்தவிதமான விசாரணை நடத்தப்படாமல் இருப்பதும், சி எஸ் ஆர் கூட போட்டு தரவில்லை என பாதிக்கப்பட்ட பிரபாகரன் தெரிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | திருவள்ளூர்: அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் கார் திருட்டு.. 4 பேர் கைது.. !

குறிப்பாக நாளை இது தொடர்பாக சிஎஸ்ஆர் பதிவு செய்யாமலும், விசாரணை நடைபெறாமல் இருந்தால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க இருப்பதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

உரிய ஆதாரங்கள் கொடுத்தும் காவல் நிலையத்தில் புகார்களை பெற்று, எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சத்யா கொலை வழக்கு.. விசாரணையை துவக்கிய சிபிசிஐடி.. சிறையில் உள்ள சதீஷ்..!