பிரபல விளையாட்டு மைதானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

சென்னை சாலிகிராமம் அருகே காலி மைதானத்தில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல விளையாட்டு மைதானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

சென்னை சாலிகிராமம் அருகே காலி மைதானத்தில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமம் மாந்தோப்பு சாலை பகுதியில் காலி மைதானம் ஒன்று உள்ளது. தினமும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கபடி, கிரிக்கெட் விளையாடி வந்தனர். நேற்று மாலை வழக்கம் போல் அப்பகுதியை சேர்ந்த சிலர் கபடி விளையாடி கொண்டிருந்த போது மைதானத்தில் இருந்த ஒரு மரத்தடியில் 2 வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு உடனே விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவயிடத்திற்கு  வந்த போலீசார் அங்கிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நாட்டு வெடிகுண்டு நிபுணர்களிடம் வெடிகுண்டை ஒப்படைத்தனர். விசாரணையில் சினிமாவில் சண்டை காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய வெடிகுண்டு என தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டுகளை சாலிகிராமம் என்ஜிஓ காலனியில் உள்ள காலி இடத்தில் வைத்து வெடிக்க செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வெடிகுண்டை வீசி சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.