தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு அரிவாள் வெட்டு ...!

தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு அரிவாள் வெட்டு ...!

தூத்துக்குடியில் ஒருதலை காதல் விவகாரத்தில்  பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி மாணவியை வழிமறித்து அரிவாளால் வெட்டிய இளைஞர் .அப்பகுதி மக்கள் இளைஞரைப் பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள  கீழ செக்காரகுடி பகுதியைச்  சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் தங்கமாரி . இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு சில நாட்களுக்கு முன்பு துவங்கியது இன்று நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று தேர்வு பிளஸ் 2 பாடிக்கும் தங்கமாரி எழுதிவிட்டு   வெளியே வந்தார். இந்நிலையில்  அவரை  ஒருதலை பட்சமாகக்  காதலித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் அந்த மாணவியிடம் பேச முயன்றுள்ளார். 

அப்போது அந்த மாணவி அவரிடம் பேச்சுக் கொடுக்காமல் விலகி சென்றுள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்த சோலையப்பன்  மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தங்கமாரியின்  தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த மாணவி தங்கமாரி  இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கீழே விழுந்தார். பின்னர் வெட்டி விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற அந்த இளைஞரை  அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சோலையப்பனை  பிடித்துத் தட்டப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் படுகாயம் அடைந்த மாணவி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தால்  அப்பகுதியில் மக்களிடையே  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :கலாஷேத்ரா விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 பேராசிரியர்கள் பணி நீக்கம்...!