திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது...!!

திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது...!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக நகரமன்ற உறுப்பினர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் திமுக நகரமன்ற உறுப்பினராக உள்ளார்.  மேலும், சக்தி நகரில் உள்ள வைத்தியலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளருமாக இருந்தும் வருகிறார். இவர் இப்பள்ளியில் யூகேஜி படிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த கொடூரனின் செயலால் பாதிக்கப்பட்டதை சிறுமி  அவரது பெற்றொரிடம் கூறியுள்ளார்.

தொடர் அலட்சியம்:

இது தொடர்பாக புகார் அளித்தும் பக்கிரிசாமி மீது வழக்கு பதிவு செய்யாமல் மகளிர் போலீசார் அலட்சியம் காட்டி வந்த நிலையில் இந்த விவகாரம் சட்டமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது.  இதன் தொடர்ச்சியாக திமுக கவுன்சிலர் பக்கிரிசாமியை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.  ஆனால் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட்டவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் மாஜி திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி.

சிறையில்:

இதனிடையே பக்கிரிசாமியை  காவல் நிலையத்தில் வைத்து  விசாரிக்காமல்  தனியார் சொகுசு மண்டபத்தில்  வைத்து போலீசார் விசாரணை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  விருத்தாசலத்தில் இருந்து அழைத்து சென்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய  போலீசார்  பின்னர் நீதிபதி  உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:   ஐஐடியில் தொடரும் உயிரிழப்புகள்.... மாணவர்கள் நள்ளிரவு போராட்டம்!!