ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி....சிக்கிய உருக்கமான கடிதம்...!!

காரைக்காலில் ஒரே கயிற்றில் கள்ளக்காதல் ஜோடி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி....சிக்கிய உருக்கமான கடிதம்...!!

காரைக்கால்  இந்திராநகரை சேர்ந்தவர் ஹாஜாபகுருதீன். இவருக்கு விஷ்வத்நாச்சியாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக விஷ்வத்நாச்சியாளுக்கு அதே பகுதியை சேர்ந்த அபுதாஹீர்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறி இருவரும் அவ்வபொழுது தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குடும்பத்தாருக்கு தெரியவந்தபோது, இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று இந்திரா நகரில் உள்ள அபுதாஹீரின் அத்தை வீட்டில், விஷ்வத்நாச்சியாள் அபுதாஹீர் இருவரும் ஒரே கயிற்றில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் விஷ்வத்நாச்சியார் கணவருக்கு எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் நாங்கள் இருவரும் உண்மையாக காதலித்தோம். எங்களால் காதலை மறக்கவும், விடவும் முடியவில்லை. எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள். மேலும் உங்களுக்கு உண்மையாக என்னால் இருக்க முடியவில்லை. இதனால் வருந்துகிறேன். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் என்று உருக்கமாக கடித்தில் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. 

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.