தமிழக மீனவர்களை வழிமறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் மீனவருக்கு வெட்டுக்காயம்!

வேதாரண்யம் மீனவர்களை வழிமறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் மீனவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை வழிமறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் மீனவருக்கு வெட்டுக்காயம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று மாலை  ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் மீன்பிடிக்க அப்பகுதியை படகு உரிமையாளர் ஆனந்த் மற்றும் சக்திவேல், கார்த்தி, சச்சிதானந்தம், ஆகிய 4 மீனவர்களும்  நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 30 நாட் டிக்கள் மையில் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது  அப்பகுதிக்கு  இரண்டு படகில் வந்த 6 இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களை வழிமறித்து கடற்கொள்ளையனில்  ஒருவன் கத்தியோடு இவர்கள் படகில் ஏறி மீனவர்களை மிரட்டி பொருட்களை கொள்ளையடிக்க முயன்று உள்ளான். அப்போது படகில் இருந்த கார்த்தி இலங்கை  கடற்கொள்ளையனின் கத்தியை மடக்கி பிடித்து சண்டை போட்டதில் கார்த்தி என்பவருக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்பு இருவரும் மோதிக் கொண்டு படகில் இருந்து கடலில் குதித்து சண்டையிட்டதில்  மீண்டும் கார்த்திக்கு படகு இயந்திரத்தில் உள்ள விசிறியில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டது. பின்பு சக மீனவர்கள் கார்த்தியை மீட்டு கரை திரும்பினர் பின்பு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று கார்த்தி தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை கடற் கொள்ளையர்கலோடு முதன் முதலாக கடலில் எதிர்த்து சண்டையிட்டு காயம் ஏற்பட்ட கார்த்தியை அப்பகுதி மீனவர்கள் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்து விசாரித்து வருகின்றனர். ஒரே வாரத்தில் வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் மூன்றாவது முறையாக பொருட்களை கொள்ளையடித்து, தாக்கியிருப்பது மீனவ கிராமங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.