55 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு போதை ஆசாமிகள்...

உத்தரபிரதேச மாநில நொய்டாவில் 55 வயதான பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

55 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு போதை ஆசாமிகள்...

கிரேட்டர் நொய்டா அருகே உள்ள ஜீவர் கிராமத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையான நான்கு பேர் அந்த வழியாக சென்ற 55வயதான பெண்ணை வழிமறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த பெண் அபாய கட்டத்தை தாண்டினாலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவன் ஒருவர் போதைக்கு அடிமையானவன் என்பது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக உத்தரபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளர். இந்த நிலையில் தொடர்ந்து உபியில் இது போன்ற பாலியல் அத்துமீறால்கள் சம்பவங்கள் நடந்து வருவது அந்த மாநில மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில் 55 பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.