ஒருதலை காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞர் கைது!

ஒருதலை காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞர் கைது!

ஆந்திராவில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒருதலை காதல்:

காக்கிநாடா அருகே உள்ள குர்ராடா என்ற கிராமத்தை சேர்ந்த வெங்கட சூரிய நாராயணா என்ற இளைஞர்.அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதையும் படிக்க: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதா..? கமல்ஹாசன் கேள்வி!

கழுத்தை அறுத்த இளைஞர்:

ஆனால், சூரிய நாராயணாவின் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர், அந்த பெண் இன்று சாலையில் நடந்துச் சென்ற போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் துடிதுடித்து அந்த இளம்பெண் கீழே சரிந்துள்ளார்.

போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்:

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த இளம் பெண் உயிரிழந்துவிட்டார். 

பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சூரிய நாராயணாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.