செருப்பில் மறைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம்...

செருப்பில் மறைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம்...

பெங்களூரு | விமானநிலையத்தில் நூதன முறையில் பயணி ஒருவர் கடத்தி வந்த சுமார் 70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் நூதன முறையில் காலணியில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 70 லட்சம் மதிப்புள்ள ஒன்றே கால் கிலோ எடையுள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | செல்போன் கடை ஷட்டரை உடைத்து காஸ்ட்லி போன்களை திருடும் மர்ம நபர்...