விமானத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தல்.! திருச்சியில் சிக்கிய 6 பேர்.!  

விமானத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தல்.! திருச்சியில் சிக்கிய 6 பேர்.!  

திருச்சி விமான நிலையத்தில் உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து, துபாய், சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  

அந்த சோதனையில், 6 பயணிகள் தங்களது உடமைகளில் மறைத்து கடத்தி வந்த சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.