சென்னை விமான நிலையத்தில் ரூ.1.73 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடியே 73 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 970 கிராம் தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கண்காணித்தனர். 

அப்போது இன்று மலேசியாவில் இருந்து சென்னை வந்த 2 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தனர். அவர்களது சீருடைகளில் ரகசிய அறைகள் வைத்து தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடமும் இருந்து ரூ. 1 கோடியே 73 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 970 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் 2 பேரையும் கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: "காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டி புதிதல்ல" கே.எஸ். அழகிரி!