ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்...

கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வந்த 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்...

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

சோதனையின் போது ஒரு ஆண் பயணியின் லக்கேஜ்களை சோதனை செய்தபோது அதில் செவ்வக வடிவிலான மெல்லிய 12 தங்க தகடுகள் மற்றும் தங்கசங்கிலி  ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவற்றின் மொத்த  எடை 539  கிராம்  மதிப்பு 31.62 லட்ச ரூபாயாகும். கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட ஆண் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பதுக்கி வைக்கப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...