சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை... சிறையில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை...

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை... சிறையில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை...

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியத்தில் தெசவிளக்கு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள மாட்டையாம்பட்டி பூவான்வளவு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது 20 வயது மகன் தனபால், அந்த கிராமத்தில் பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 1-ம் தேதியன்று 9 வயது சிறுமியிடம் நொங்கு வெட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி, தனியாக அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், சிறுமியின் கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்துவிட்டான். 

இந்த சம்பவம் தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைந்தனர். தொடர்ந்து அவன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். கடந்த இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக சிறையில் இருந்த தன்பால் இன்று மாலை சேலம் மத்திய சிறையில் உள்ள கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான்.

இதையறிந்த சேலம் சிறைச்சாலை போலீசார், தனபாலின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளியே இருந்தபோது கஞ்சா போதையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. உள்ளே கஞ்சா பிடிக்க முடியாத நிலையில், மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் சிறையில் தனபாலுக்கு ஏதாவது நடந்ததால் ஏற்பட்ட மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.