சொத்துக்காக தங்கை மற்றும் அவரது கணவரை ஓட ஓட வெட்டி கொலை!

சொத்து தகராறு காரணமாக தங்கை மற்ற்யும் அவரது கணவ்ராஇ அண்ணன் ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கொடூரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக தங்கை மற்றும் அவரது கணவரை ஓட ஓட வெட்டி கொலை!

தூத்துக்குடி | அண்ணா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் லாரி டிரைவர் இவரது மனைவி மாரியம்மாள் அதே பகுதியில் வசித்து வரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் என்பவர் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார். இந்த வீட்டை விலைக்கு வாங்கியது தொடர்பாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இரவு நேர வீடியோசாட்.. இறுக்கமான உடை... மனைவியை கொன்ற எபியின் 11 பக்க கடிதம்..!

இந்நிலையில் இன்று இரவு முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் அண்ணாநகர் 6வது தெருவில் வைத்து ராம்குமாரை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த தங்கை மாரியம்மாளையும் இருவரும் சேர்ந்து வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கணவன் மனைவியை கொலை செய்த முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரையும் தேடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் நன்னாளில் இந்த சம்பவம் நடந்தது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் மீண்டும் விசாரணை கைதிகள் உயிரிழப்பு - 4 காவலர்கள் சஸ்பெண்ட்