சித்தியுடன் திருமணத்தை தாண்டிய உறவு...தட்டிகேட்ட அத்தைக்கு நேர்ந்த விபரீதம்...நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சித்தியுடன் திருமணத்தை தாண்டிய உறவு...தட்டிகேட்ட அத்தைக்கு நேர்ந்த விபரீதம்...நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சித்தியுடன் திருமண பந்தத்தை மீறிய உறவை வைத்திருந்ததால் தட்டிகேட்ட அத்தையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கொளத்தூர் பாரதி நகரை சேர்ந்த கணேஷ் என்பவர், சித்தியுடன் திருமண பந்தத்தை மீறி தகாத உறவு வைத்து, சித்தி மற்றும் அவரது வாரிசுகளுடன் வசித்து வந்துள்ளார். இதை அவரது அத்தை குணசுந்தரி தட்டிகேட்டதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஏற்கனவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

சித்தியுடனான உறவிற்கு அத்தை இடைஞ்சலாக இருப்பார் என கருதிய கணேஷ், தனது அத்தை குணசுந்தரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 2020ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சம்பவம் தொடர்பாக, கணேஷ் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க : TANUVAS -ன் இளநிலைப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

இந்த வழக்கின் விசாரணை சென்னை சென்ட்ரல் அருகே அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி T.H.முகமது பாரூக் முன்பு நடந்தபோது, காவல் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜரானார்.

பின்னர் வழக்கின் வாதங்களை கேட்டறிந்து தீர்ப்பளித்த நீதிபதி, கணேஷன் அத்தை ஞானசுந்தரியை கொலை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, கணேஷுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.