"மின்னல் ரவுடி வேட்டை" 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது...

தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை குறைக்க காவல் துறையால் நடத்தப்பட்ட ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 ரவுடிகள் பிடிபட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மின்னல் ரவுடி வேட்டை" 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது...

தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை குறைக்கவும், தடுக்கவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவின் அடிப்படையில் ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற ஆப்பரேஷனை நடத்தி வருவதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பிரபல ரவுடி மீது தாக்குதல்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 'மின்னல் ரவுடி வேட்டை' ஆப்பரேஷன் மூலம் தமிழகத்தில் 133 ரவுடிகள் பிடிபட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த மற்றும் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சிக்கியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரீல்ஸால் சிக்கிய வழிப்பறி திருடன்... போலீசார் வலைவீச்சு...

தமிழக காவல்துறையால் ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்...! பரபரப்பு சம்பவம்...!