மலையாள நடிகையின் ஆபாச படம்... மார்பிங் செய்து இன்ஸ்டாவில் போட்ட இளைஞர்கள்.. தட்டி தூக்கிய போலீஸ்....!

பிரபல மலையாள நடிகையின் போட்டோகளை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலையாள நடிகையின் ஆபாச படம்... மார்பிங் செய்து இன்ஸ்டாவில் போட்ட இளைஞர்கள்.. தட்டி தூக்கிய போலீஸ்....!

பிரபல மலையாள நடிகையான பிரவீணாவின் ஆபாச போட்டோக்கள் சில சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதை பார்த்து நடிகை பிரவீணாவும், அவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்... அந்த ஆபாச போட்டோக்களில் இருப்பது தொடர்புடைய நடிகையில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாமிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் நடிகை பிரவீணாவின் போட்டோ மார்பிங் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போட்டோகளை பதிவிடுவதற்காகவே இன்ஸ்டாகிராமில் போலி ஐடி உருவாக்கப்பட்டதும் தெரியவந்தது.

போலி ஐடி குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அதில் குமரி மாவட்டை சேர்ந்த மணிகண்டன், பாக்கியராஜ் ஆகிய இருவரும் சிக்கியுள்ளனர். மணிகண்டனை நாகர்கோவிலில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன் கைது செய்யப்பட்டதையறிந்த பாக்கியராஜ் தலைமறைவானதாக கூறப்படுகிறது. தலைமறைவான பாக்கியராஜ் டெல்லி சாகர்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனைதொடர்ந்து உடனடியாக டெல்லி சென்ற தனிப்படை போலீசார், பதுங்கியிருந்த பாக்கியராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர். 

இது குறித்து பாதிக்கப்பட்ட நடிகையான பிரவீணா கூறுகையில், மார்பிங் முறையில் எண்ணுடைய படங்களை ஆபாசமாக மாற்றி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இருவரை கைத் செய்ததில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அவர், சினிமா துறைகளில் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவதாகவும், இனியாவது பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.