ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட காணாமல் போன பெண்ணின் உடல்; கணவர் மீது வழக்குப் பதிவு!

காணாமல் போனதாகத் தேடிய பெண், நதிக்கரையில் புகைக்கட்டிருக்கிறார். சந்தேகத்தின் பெயரில் கணவர் மீடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட காணாமல் போன பெண்ணின் உடல்; கணவர் மீது வழக்குப் பதிவு!

உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில், ஒரு திருமணமான பெண் காணாமல் போனதாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அப்பகுதியில் உள்ள நதிக்கரையில் புதைக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. இதனைக் கண்ட போலீசார் ஞாயிற்றுக் கிழமை அன்று பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவித்தனர். அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வட்ட அதிகாரி அபய் பாண்டே, “கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கன்ஷிராம் காலனியில் வசிக்கும் 22 வயது திருமணமான பெண் ஜூலை 12 அன்று காணாமல் போனார். அவரது உடல் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது” என போலீஸ் புகாரில் இருந்த தகவல்களை கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் கணவர் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.