வாடகை வீட்டில் குடியிருந்த பெண் கொலை... சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த கொடூர சம்பவம்...

சேலத்தில் வாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடகை வீட்டில் குடியிருந்த பெண் கொலை... சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த கொடூர சம்பவம்...

சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர்  நடேசன் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள ஒரு வீட்டில் பெங்களூருவைச் சேர்ந்த தேஜ்மண்டல் என்ற மாற்று திறனாளி பெண்மணி தனது கணவர் பிரதாப்புடன் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு  தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதாப் கடந்த சில நாட்களாக தான் சென்னையில் இருப்பதாகவும், தேஜ்மண்டல் எனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் தகவல் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து உரிமையாளர் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டு, துர்நாற்றமும் வீசியுள்ளது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று  பார்த்ததில் வீட்டின் பரண் மீது ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது.  

இதனையடுத்து சூட்கேஸை திறந்து பார்த்ததில் அதில் அழுகிய நிலையில் தேஜ்மண்டல் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கொலையுண்ட தேஜ்மண்டல் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.