மண் சரிவால் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட 9 தொழிலாளர்கள்...அவர்களின் நிலைமை என்ன? மீட்டார்களா?

மண் சரிவால் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட 9 தொழிலாளர்கள்...அவர்களின் நிலைமை என்ன? மீட்டார்களா?

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதா வலது கரை கால்வாய் திட்ட பணியின் போது  ஏற்பட்ட மண் சரிவில் ஒன்பது தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.  

மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள ஸ்லீமனாபாத் என்ற இடத்தில் பர்கி பாதாளக் கால்வாயின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

அப்போது, ஏற்பட்ட மண் சரிவால்  பணியில் ஈடுபட்டிருந்த சுமார் ஒன்பது தொழிலாளர்கள்,சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

தகவலறிந்து வந்த மீட்பு படையினர், சுரங்கப்பாதையில் இருந்த தொழிலாளர்களில் ஐந்து பேரை மீட்ட நிலையில், மாயமான மேலும் நான்கு பேரை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.