அறிவுரை சொன்ன அண்ணன்.. போட்டுத் தள்ளிய தம்பி.. கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்...

கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட அண்ணனை தம்பியே வெட்டிக் கொலை செய்துள்ளார். கண்மூடித்தனமாக கள்ளக்காதலால் உண்டான சம்பவத்தை விரிவாக விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

அறிவுரை சொன்ன அண்ணன்..  போட்டுத் தள்ளிய தம்பி..   கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையை அடுத்த திம்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவருக்கு குபேந்திரன் என்ற தம்பி ஒருவர் உண்டு. 

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

குபேந்திரனின் மனைவி சிவரஞ்சனி 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இதையடுத்து குபேந்திரனுக்கு சிறுமுகையில் உள்ள வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்த பெண், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும் படிக்க | வாட்ஸ்-அப்பில் சாதிப்பெருமை பேசியதால் வெட்டிக் கொலை... எங்கே செல்கிறது சமூகம்?

நீயும் தனி, நானும் தனி சேர்வோம் இனி என்று குபேந்திரனும், அந்த பெண்ணும் உல்லாசமாக வாழத் தொடங்கி உள்ளனர்.. ஒருகட்டத்தில் தனக்கு தாலி கட்டி மனைவியாக மரியாதையாக நடத்துமாறு குபேந்திரனை வற்புறுத்தி உள்ளார் அந்த பெண்.

கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்

இவ்வளவு நாள் உல்லாசமாக இருந்தாகி விட்டது. ஆனால் இப்போது தாலி கட்டச் சொல்லி தொல்லை செய்கிறாளே என எண்ணிய குபேந்திரன், அந்த பெண்ணை நைசாக கழட்டி விட்டு விட்டு ஒன்றும் தெரியாத பிள்ளை போல் அண்ணன் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். இந்த நிலையில் தன்னை கை கழுவிய குபேந்திரனுடன் மீண்டும் சேர நினைத்த அந்த பெண் ரங்கராஜ் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்றுள்ளார். 

மேலும் படிக்க |  திருச்சி: சென்னையை சேர்ந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை.. இறைவன் தண்டிப்பான்.. கைப்பற்றப்பட்ட கடிதம்..!

கள்ளக்காதல் தவறு என சுட்டிக் காட்டிய அண்ணன்

குபேந்திரனை தன்னுடன் அனுப்புமாறு கேட்ட அந்த பெண்ணை திட்டி தீர்த்ததோடு, தன் தம்பியை விட்டு விலகுமாறு எச்சரித்திருக்கிறார் அண்ணன் ரங்கராஜ். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் நுழைந்த குபேந்திரன், அண்ணனிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார். அவள் வேண்டாம் என்றுதானே அங்கிருந்து இங்கு வந்தேன். இப்போது எதற்கு அவளை வீட்டில் உட்கார வைத்து பேசுகிறாய் என கதையை தலைகீழாக மாற்றி உள்ளான்.

மேலும் படிக்க | வேல்முருகன் மனைவி தற்கொலை முயற்சி... உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு பரபரப்பு...

இரவோடு இரவாக அண்ணனை தீர்த்துக் கட்டிய தம்பி

வாக்குவாதம் முடிந்த நிலையில் சோகத்துடன் சிறுமுகை பெண் வெளியேற ரங்கராஜ் தன்னுடைய வேலைகளை பார்க்கத் தொடங்கி உள்ளார். ஆனால் தனது கள்ளக்காதலி மீது அண்ணணுக்கும் ஆசை உண்டாகி விட்டதோ என்ற சந்தேகம் குபேந்திரன் மனதை குடைய ஆரம்பித்துள்ளது. 

மேலும் படிக்க | சத்யா கொலை வழக்கு.. விசாரணையை துவக்கிய சிபிசிஐடி.. சிறையில் உள்ள சதீஷ்..!

கண்மூடித்தனமான கள்ளக்காதலால் சீர்குலைந்த குடும்பம்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் எப்போதும் போல் தூங்கி கொண்டிருந்தார் ரங்கராஜ். அதிகாலை 2.30 மணிக்கு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் ரங்கராஜை தம்பி குபேந்திரன் அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளான். ஆத்திரம் அடங்காமல், உறவினர்களுக்கு போன் செய்து, அண்ணனை வெட்டிக் கொலை செய்ததை பகிரங்கமாக கூறி உள்ளான் குபேந்திரன். 

காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், ஆனால் இங்கு கள்ளக்காதலோ அண்ணனையே மறைத்து கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது..

மேலும் படிக்க |  சத்யாவை கொன்ற சதீஷை ரயில் முன் தள்ளிவிட்டு தண்டியுங்கள்.. விஜய் ஆண்டனியின் வேண்டுகோள்..!