இது ஒரு வழி பாதை... திரும்பி போக முடியாமல் ஒரேடியாக உயிரிழந்த ரவுடி...

திருந்தி வாழ்ந்த ரவுடியை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. போலீஸ் இன்பார்மராக மாறியதால் கொலை நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது ஒரு வழி பாதை... திரும்பி போக முடியாமல் ஒரேடியாக உயிரிழந்த ரவுடி...

சென்னை: தண்டையார்பேட்டை சிவாஜி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் என்கிற ‘குண்டு’ சதீஷ். 22 வயதான இவர் அந்த பகுதியின் பிரபல ரவுடியாக வலம் வந்த போது, அவர் மீது வியாசர்பாடி, திருவொற்றியூர், கொடுங்கையூர் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. 

மேலும் படிக்க | சிறுவனுடன் காதல்... கல்லூரி பெண் கர்ப்பம்.. குழந்தை தனதில்லை என மறுத்ததால் பரபரப்பு...

சதீஷுக்கு கஞ்சா வியாபாரியாக உள்ள ‘இட்டா’ அஜித் உள்பட ஒரு சில குற்றவாளிகளின் நெருங்கிய நட்பும் இருந்து வந்திருக்கிறது.  ஏற்கெனவே ஜி.டி.கோர்ட் பகுதியில் விசாரணைக்கு ஆஜராக வந்த நபரை நீதிமன்ற வாசலிலேயே வெட்டியவர்தான் இந்த ‘இட்டா’ அஜித். இந்த நிலையில் சமீப காலமாக குற்ற செயல்களை விட்டு விட்டு மனம் திருந்தி வாழ்ந்து வந்திருக்கிறார் ‘குண்டு’ சதீஷ்

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!

ஆனால் சதீஷ் திருந்தி வாழ்ந்தது அவரது நண்பரான ‘இட்டா’ அஜித்துக்கு பிடித்திருக்கவில்லை. திருந்தியவன் எங்கே தன்னை போலீசாரிடம் போட்டுக் கொடுத்து விடுவானோ என்ற சந்தேகமும் அஜித்தின் மனதில் எழுந்தது. 

மேலும் படிக்க | அரசனை நம்பி புருஷனை விட்ட கதை... கள்ளக்காதலனே கழுத்தை நெரித்துக் கொன்ற அவலம்...

அவர் நினைத்தது போலவே, சில நாட்களுக்கு முன் ‘இட்டா’ அஜித் மற்றும் அவரது நண்பர்கள் குறித்து போலீசாரிடம் ‘குண்டு’ சதீஷ் சில விஷயங்களை சொன்னதாக தகவல்கள் பரவியது. தன்னை போட்டுக் கொடுத்ததைத் தாண்டி, போலீஸ் இன்ஃபார்மராகவும் சதீஷ் செயல்படுவதாக சந்தேகமடைந்த அஜித், சதீஷை கொலை செய்வதற்கு சில நாட்களாக திட்டம் தீட்டி வந்தான். 

மேலும் படிக்க | வீட்டில் திருடிய நண்பனை அடித்தே கொலை... எலும்புகூடுகளை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பு...

அதன்படி சென்னை ஏழுகிணறு அருகே வுட்வார்ப் கால்வாய் அருகே நின்றிருந்த ‘குண்டு’ சதீஷை, அஜித் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி வீசினர். வெட்டுப்பட்ட சதீஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மேலும் படிக்க | மாணவர்களுக்கு நன்னெறி கல்வி மிக அவசியம்..!- உயர்நீதிமன்ற மதுரை கிளை...

மனந்திருந்தி வாழ நினைத்த முன்னாள் ரவுடியை இன்னாள் ரவுடிகள் வெட்டி சாய்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரவுடி தொழில் மோசமானது என அறிந்து திருந்தி வாழ இனி எந்த ரவுடிகளும் முயற்சிக்க மாட்டார்களோ என்ற பயமும் நிலவி வருகிறது.

மேலும் படிக்க | மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை அடித்தே கொலை செய்த குடும்பம்...