கோவில் உண்டியல் தொடர் திருட்டு... 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை... 

கோவில் உண்டியல் திருட்டு தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவில் உண்டியல் தொடர் திருட்டு... 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை... 

நேற்று இரவு வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவில் குடிபோதையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு நபர்கள் ரோந்து பணி காவலரைப் பார்த்ததும் ஆட்டோவில் ஓட்டம் பிடித்துள்ளனர். 

அப்போது பார்த்திபன் என்ற காவலர் அவர்களைத் துரத்திப் பிடித்து ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் இரண்டு கோவில் உண்டியல்கள், ட்ரில்லிங் மெஷின், கட்டிங் மெஷின் ஆகியவை இருப்பது தெரியவந்தது.  

போலீசார் இருவரையும் காவல் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வடபழனி பகுதியைச் சேர்ந்த சூர்யா(21), சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40) என்பது தெரியவந்தது.  

கைப்பற்றப்பட்ட உண்டியல்களில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்ததும், இவர்கள் இருவரும் தொடர் கோவில் உண்டியல் திருடர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்த விருகம்பாக்கம் போலீசார் நீதிமன்றம் அழைத்து சென்று சிறையில் அடைக்க உள்ளனர்.