பெண் காவலரின் உதட்டை கடித்த காவல் நிலைய எழுத்தர்…  

சென்னையில் பெண் காவலரின் உதட்டைக் கடித்த வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் எம்.ஜி.ஆர் காவல் நிலையத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

பெண் காவலரின் உதட்டை கடித்த காவல் நிலைய எழுத்தர்…   

சென்னையில் பெண் காவலரின் உதட்டைக் கடித்த வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் எம்.ஜி.ஆர் காவல் நிலையத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கம்பியூட்டர் பிரிவில் பணியாற்றி வரும் பெண் காவலரிடம் அதே காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த வெங்கடேசன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன் அவரின் உதட்டைக் கடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் இது குறித்து தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் வெங்கடேசனை அதிரடியாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்து இணை ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும், பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் நிலைய எழுத்தர் வெங்கடேசனிடம் அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.