ஓய்வு பெற்ற போராசிரியர்  வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது...

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர்  வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஓய்வு பெற்ற  போராசிரியர்  வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது...

ஈரோடு அடுத்த பழைய பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போராசிரியர் சண்முகவேலன். கடந்த மாதம்  இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்   பீரோவில் வைக்கப்பட்டிருந்த  23 சவரன் தங்கநகை மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் தெடர்பாக ஈரோடு வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில்  இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த தமிழ்வாணன் , அரவிந்தன் என்பது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாது இவர்கள் இருவருடன் சேர்ந்து இன்னொரு நபரும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் டிவி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.