கொள்ளையடித்து Tired ஆகி, கூல் டிரிங்க்ஸ் குடித்து ரிலாக்ஸ் செய்த கொள்ளையர்கள்!

கொள்ளையடித்து Tired ஆகி, கூல் டிரிங்க்ஸ் குடித்து ரிலாக்ஸ் செய்த கொள்ளையர்கள்!

நாகை அடுத்த நாகூரில் சூப்பர் மார்கெட்டில் திருட வந்த கும்பல் நிதானமாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்துவிட்டு தப்பிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சாமுதம்பி மரைக்காயர் தெருவில் AJ ரியல் சூப்பர் மார்க்கெட் என்ற பல்பொருள் அங்காடி கடை இயங்கி வருகிறது. 

இந்த நிலையில், இரவில் கடை உரிமையாளர், வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு காத்திருந்த இரண்டு மர்ம நபர்கள், நள்ளிரவு 2 மணிக்கு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

கடையின் உள்ளே புகுந்த இரண்டு மர்ம நபர்கள், கடையின் லாக்கரை உடைத்து திருடியுள்ளனர். தொடர்ந்து பொருட்கள் மற்றும் சில ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், அங்கிருந்து கிளம்ப முயற்சித்துள்ளனர்.

அப்பொழுது, எந்தவித பதற்றமுமின்றி கடையின் குளிர் சாதன பெட்டியில் இருந்த குளிர் பான  பாட்டில்களை எடுத்து குடித்துவிட்டு, அங்கிருந்து ரிலாக்ஸாக சென்றுள்ளனர். இவை அனைத்தும், அக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

நாகூரில் சூப்பர் மார்கெட்டில் திருட வந்த கும்பல் நிதானமாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || 70 வயது மூதாட்டியிடம் தகாத செயல்களில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர்!