போலீசிடம் சிக்காமல் இருக்க தன்னைத்தானே பிளேடால் அறுத்துக் கொண்ட ரவுடி..

புதுச்சேரியில் தன்னை பிடிக்க வந்த போலீசாரின் முன்பு, ரவுடி ஒருவன், தன்னைத் தானே பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசிடம் சிக்காமல் இருக்க தன்னைத்தானே பிளேடால்  அறுத்துக் கொண்ட ரவுடி..

புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட சின்ன கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரிஷி என்பவர் ஏரியாவிலேயே முக்கிய ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரிஷியின் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்கு மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது, பட்டாக்கத்தியுடன் கொண்டாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும், மது போதையில் பட்டாக்கத்தியுடன் ஊர்வலம் சென்றிருக்கிறார் ரிஷி. இதனால் பதறி போன பொதுமக்கள் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | பல நாட்கள் கழித்து மீண்டும் சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு...

தகவலறிந்து வந்த போலீசார் ரிஷியைக் கையும் களவுமாக பிடிக்க முயன்ற போது, ஆத்திரமடைந்த ரவுடி ரிஷி, என்னையா பிடிக்க வர்றீங்க? எனக் கத்திக் கூப்பாடு போட்டு, தன்னை கைது செய்தால், உடனே தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். 

முதலில் இந்த மிரட்டலை பெரிதாக எடுத்துக் கொள்ளாததிகாரிகள்,அ வரை கைது செய்ய நெருங்கும் போது, ரிஷ் தனது கையில் மறைத்து வைத்திருந்த ப்ளேடை எடுத்து தனது கையை அறுத்துள்ளார். இருந்தும் அதிகாரிகள் உடனே அவரிப் பிடிக்க நெருங்கிய போது, கோபம் தாளாமல் கை, கால் , மற்றும் கழுத்து பகுதிகளில் சர சரவென அறுத்துக் கொண்டார் ரிஷி.

மேலும் படிக்க | எல்லாமே அவளுக்காகத்தான்.. கள்ளக்காதலிக்காக திருடனாக மாறிய இளைஞர்...

யாரும் எதிர்பாராத விதத்தில் பரபரப்பில் ஆழ்ந்த பகுதி, ரிஷியை அவரது சகோதரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் அமைதியானது. அவரைக் கண்டு அது வரை நடுங்கி பயத்தில் இருந்த அப்பகுதியினர் இவரது இச்செயலால் நகைச்சுவை ரவுடியாக உருமாறி இருப்பதாகக் கூறி வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்