பள்ளி மாணவி கர்ப்பம்- திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்

விருதுநகர் அருகே 17 வயது பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவி கர்ப்பம்-  திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்

விருதுநகர் மாவட்டம் அடுத்த ரோசல்பட்டி ஊராட்சி அருகே உள்ள ஜக்கம்மா தேவி நகரை சேர்ந்த 17 வயது சிறுமி நகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இதற்கிடையில் வீட்டில் சோர்வாக இருந்த மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது மாணவி அழுதபடியே உண்மையை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதில் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம்  வகுப்பு படிக்கும் போது, உடன் படித்த தங்க முனீஸ்வரனை காதலித்து வந்ததாகவும், இருவரும் தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாகச் சந்தித்து வந்ததாகவும் கூறினார்.

மேலும் கடந்த ஜூன் 15, ஜூலை 7 ,ஆகஸ்ட் 3  ஆகிய தினங்களில் வீட்டுக்குள் நுழைந்து தங்கமுனீஸ்வரன், தன்னை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். அதனால் தற்போது  2 மாத கர்ப்பமாக இருப்பதாக மாணவி கூறியுள்ளார்.

இதை  கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இச்சம்பவம் குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவான முனீஸ்வரனை தேடி வருகின்றனர்.