ஏழு லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை.. கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்!!

புதுச்சேரி பிராந்தியம் மாஹே பகுதியில் இருவேறு கடைகளில் செல்போன் கடைகளில் ஏழு லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்ற வடமாநில நபர்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஏழு லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை.. கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்!!

மாஹே பகுதி கேரளா மாநிலம் கோழிகோடு அருகே உள்ளது, இங்கு ரஃபிக் அஹமது மற்றும் அவரது உறவினர் அருகருகே இரண்டு செல்போஃன், விலை உயர்ந்த வாட்ச் விற்பனை கடைகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  இவா்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூபாய்  7 லட்சம் மதிப்பிலானசெலபோன்கள் மற்றும் வாட்ச்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சென்ற காவல்துறையினா், அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்டது பீஹார் மாநிலத்தை சேர்ந்தவா்கள் என்பது தொியவந்தது.

இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு புதுச்சேரி பகுதியில், வாட்ச் கடையில் புகுந்து ஒரு கும்பல்  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. இவா்களை அடையாளம் கண்டும் இதுவரையிலும்  காவல்துறையினரால் பிடிக்க முடியமால்  திணறி வருவது குறிப்பிடத்தக்கது.