10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுனர்.. போக்சோவில் கைது

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுனர்.. போக்சோவில் கைது

விருதுநகரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவர் கோயம்புத்தூர் பகுதியில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.  

இவர் கொத்தங்குளம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.