காதல் கணவர் விபத்தில் மரணம்; கணவர் வீட்டாரின் பாலியல் தொல்லை : விஷம் குடித்த தற்கொலைக்கு முயன்ற பெண்!! 

கணவர் இறந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

காதல் கணவர் விபத்தில் மரணம்; கணவர் வீட்டாரின் பாலியல் தொல்லை : விஷம் குடித்த தற்கொலைக்கு முயன்ற பெண்!! 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், கணவர் இறந்த நிலையில், அவரது குடும்பத்தினர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.

மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் குணவதி. இவர் யோகநந்தன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த விபத்தில் அவரது கணவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், யோகநந்தன் சகோதரியின் கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த குணவதி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.