கள்ளதொடர்பில் இருந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்கள்...

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட தந்தையை அவரது மகன்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளதொடர்பில் இருந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்கள்...

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெடுங்கூர் மேல தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. 50 வயதான இவருக்கு  45 வயதில் சாந்தி என்ற மனைவியும்,  25 வயதில் அரவிந்தகுமார் மற்றும் 22 வயதில் வினோத் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

அரவிந்தகுமார் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு  கடந்த 2-ஆம் தேதி சொந்த ஊரான நெடுங்கூருக்கு வந்துள்ளார்.வினோத் வேலைக்கு செல்லாமல்  வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் சுப்பிரமணிக்கு அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணூடன் கடந்த 7 வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் மனைவி சாந்தியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியன்று தன் தந்தையை வீட்டுக்கு வரும்படி மகன்கள் அரவிந்த் மற்றும் வினோத் ஆகிய இருவரும் அழைத்துள்ளனர்

அப்போது சுப்பிரமணிக்கும், மகன்களுக்கும்  வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மகன்கள் அரவிந்தகுமார் மற்றும் வினோத் ஆகிய இருவரும் தந்தை  சுப்பிரமணியத்தை அரிவாள் மற்றும் இரும்பு பைப்பால் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்து சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த் குமார் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.