தனியார் கொரியர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு.! சோதனையில் சிக்கிய போதை பொருட்கள்...! பழனியில் பரபரப்பு.

தனியார் கொரியர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு.!  சோதனையில் சிக்கிய போதை பொருட்கள்...! பழனியில் பரபரப்பு.

பழனியில் உள்ள தனியார் கொரியர் அலுவலகத்தில் பழனி நகர போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமான பொருட்கள் சிலவற்றை பறிமுதல் செய்தனர். 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாட் மசாலா தமிழக அரசால் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இருந்தும், இதுபோன்ற சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் பல்வேறு வழிகளில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதோடு, பேருந்து, லாரி மற்றும் கொரியர் என பல்வேறு வழிகளில் குட்கா,  பாட் மசாலா போன்ற  சட்டவிரோத பொருட்களை கொண்டு வருகின்றனர் என தகவல்கள் கிடைத்தது. 

இதனையடுத்து, நேற்று பழனி முழுவதும் அதிரடியாக சோதனை செய்ததில்  ஒரு தனியார் கொரியர் அலுவலகத்திலிருந்து,  500 கிலோவுக்கும்  மேற்பட்ட குட்கா, பான் மாசல போன்றவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 


அப்போது,  பழனி நகர போலீசார் அதிரடியாக பழனியில் உள்ள அனைத்து கொரியர் அலுவலகங்களிலும் சோதனை செய்தனர். மேலும் அனைத்து கொரியர் அலுவலகத்தில் இதுபோன்று சட்டவிரோதமாக விற்பனைக்கு உடந்தையாக இருக்கக் கூடாது என எச்சரிக்கை செய்தனர்.

இதையும் படிக்க     | முதல்வர் திறந்து வைத்த கட்டடத்தில் அங்காங்கே விரிசல்...? மக்கள் அவதி.