தாய் - மகள் உயிரிழந்த விவகாரம்... கள்ளக்காதலன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது அம்பலம்...

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் உயிரிழந்த விவகாரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகியது.

தாய் - மகள் உயிரிழந்த விவகாரம்... கள்ளக்காதலன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது அம்பலம்...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம் மற்றும் அவரது மகள் 7 வயது தர்ஷினி இருவரும்  கடந்த 12ம் தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்ததில் இருவரும் உயிரிழந்ததனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  உயிரிழந்த கற்பகம் வீட்டில் அருகில் இருக்கும் வீரப்பெருமாள் என்பவர் கற்பகத்திற்கு வாட்ஸ் அப் உரையாடல் மூலமாக தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததும், இதற்கு மறுப்பு தெரிவித்தால் ஏற்கனவே இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த படம் மற்றும் வீடியோவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரும் காட்டி விடுவேன் என்று கூறியது தெரியவந்தது.

இதனால் மன விரக்தியடைந்த  கற்பகம் மகளுடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.