பைக்கை எரித்து விட்டு ஸ்டைலாக நடந்து சென்ற நபருக்கு வலைவீச்சு...

தாம்பரம் அருகே மளிகை கடை மற்றும் 2 இருசக்கர வாகனம் ஏரித்துவிட்டு எந்த ஒரு பதட்டமும் இன்றி ஒருவர் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு நிலவியுள்ளது.

பைக்கை எரித்து விட்டு ஸ்டைலாக நடந்து சென்ற நபருக்கு வலைவீச்சு...

சென்னை: கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் சர்மா தெருவில் வசித்து வருபவர் சங்கர பாண்டி இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் அதிகாலை கடை திறப்பதற்காக சென்றபோது கடை தீப்பிடித்து மளமளவென எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் படிக்க | நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வீதியுலா வாலிபர்களை கைது செய்த காவல்துறை !!

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷட்டறைத் திறந்து தீயை அணைத்தனர் அதற்குள் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான மழிகை பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் அடைந்தது.

அதுமட்டுமின்றி கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் இரு சக்கர வாகனம் மற்றும் ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம் என இரண்டு வாகனங்களும் தீ வைத்து எரிந்து இருப்பது தெரிய வந்தது.

மேலும் படிக்க | 4 குழந்தைகள் உட்பட 9 பேரை பலி கொண்ட பயங்கர விபத்து...

மேலும் இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பார்த்த போது கடை மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் ஏரித்து விட்டு எந்த ஒரு பதட்டமும் இன்றி ஒருவர் நடந்து செல்லும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மளிகை கடைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தை எரித்து சென்ற மரம் நபரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆதாரங்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- போலீஸ் குறித்து புகார்...